புதுச்சேரி கடற்கரையில் சித்ரா பவுர்ணமியையொட்டி 57-வது மகா சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்று கடல் அன்னையை தீப ஆராதனை காட்டி வழிபட்டார்.
கோவை பாலமலை ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்; சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.