Author: Prime Reporter
நடிகைகள் குறித்து சிவகுமார் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறன் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்து விளாசியுள்ளார்.
இனியும் திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்புப் பகுதியில் பட்டியலின விவசாயி திரு. ஆறுமுகம் அவர்கள் கொலை செய்யப்பட்டு ஆறு நாட்களாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத விரக்தியில் அவரது மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதால், இன்று மேலும் ஒரு அப்பாவி உயிர் பலியாகியுள்ளது. திறனற்ற திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாகக் குற்றங்கள் பெருகிய போதெல்லாம் வேடிக்கை பார்த்த கொடூரம் போதாதென்று, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும், வேடிக்கை பார்க்கிறதா தமிழகக் காவல்துறை? இன்னும் 30 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் திமுக அரசைத் தமிழக மக்கள் தூக்கியெறியவுள்ள நிலையில், இனியும் ஏவல்துறையாகச் செயல்படாது, தமிழகக் காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க…
அஜித் எடுத்துள்ள முடிவு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் கோலிவுட்டுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் Ajith Kumar. ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான ஸ்டைலும், வலுவான திரைமுகமும் கொண்ட அவரின் சமீபத்திய வெளியீடான Good Bad Ugly திரைப்படம் வசூல் மற்றும் வரவேற்பு ஆகிய இரண்டிலும் பிளாக்பஸ்டர் சாதனையை படைத்தது. இந்த வெற்றியின் பின்னர், அந்த படத்தை இயக்கிய Adhik Ravichandran உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, ரசிகர்கள் மத்தியில் “AK 64” என்று அழைக்கப்படும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. எனினும், இந்த திட்டம் குறித்து தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், இப்படத்தை தயாரிக்கப்போகும் நிறுவனம் எது என்ற கேள்வியும் இன்னும் பதில் காணாமல் உள்ளது. இந்நிலையில், அஜித் தனது அடுத்தடுத்த சினிமா திட்டங்களை…
ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த் பற்றி தெரிவித்த கருத்துக்கள் குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து ரியாக்ட் செய்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் வேகமாக உயர்ந்து வரும் சென்சேஷனல் நடிகைகளில் முன்னிலையில் இருப்பவர் ஸ்ரீலீலா. குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இந்த ஆண்டு தமிழில் வெளியான பராசக்தி திரைப்படத்தின் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், பல எதிர்பார்ப்புகளுடன் வெளியான அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல், சராசரி வரவேற்பில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியான உஸ்தாத் பகத் சிங் திரைப்படமும் விமர்சகர்களிடையே நல்ல மதிப்பீட்டை பெறாமல், எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக சந்தித்து வருகிறது. இதனால் ஸ்ரீலீலாவின் சமீபத்திய படத் தேர்வுகள் குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நடிப்பைத் தாண்டி தனது ஆற்றல்மிக்க நடனத்தால் ரசிகர்களை கட்டிப்போடும் ஸ்ரீலீலா, குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தில் ஆடிய உற்சாகமான நடனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, இளம் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்தார். ஆனால், இந்த புகழின் மறுபக்கமாக, கடுமையான ட்ரோல்கள்…
கென் கருணாஸ் நடித்த யூத் படம் 4 நாட்களில் வேகமான வசூலுடன் 20 கோடி நோக்கி சென்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான குவாரியில் இளைஞர் சந்தேக மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் அருகே இயங்கிவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் இளைஞரின் சடலம் மீட்பு – விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டியின் மகனுக்குச் சொந்தமான குவாரியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, இதே திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமான குவாரியில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாகக் கூறி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்…
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ரகசியமாகக் கோவா சென்றதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல், ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே, பாடகி கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்டுள்ள புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகளுக்கு தீர்வாகும் முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள் மற்றும் அதனை உணவில் சேர்க்கும் முறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
