இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் மறைவுச் செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கூல் சுரேஷ் இறுதிச்சடங்கிற்குச் சென்ற விதம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாக்யராஜ் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கூல் சுரேஷ், கையில் ஒரு பெரிய முருங்கைக்காய் கட்டை எடுத்துக்கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினார். இது இணையத்தில் பலரது கண்டனங்களுக்கு உள்ளானது.
தான் எந்த அவமதிப்பும் செய்யவில்லை என்றும், பாக்யராஜ் அவர்களின் சினிமா வரலாற்றில் ‘முருங்கைக்காய்’ ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்வதால், அந்த அடையாளத்தை மதித்தே தான் இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னைத் தவறாக விமர்சிப்பவர்களை மறைந்த இயக்குநர் பாக்யராஜே தண்டிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
செருப்பால் அடிப்பேன்.. நாஞ்சில் விஜயன் மோதல் குறித்து மனம் திறந்த பிரபலம்..!
ஒரு இறுதிச்சடங்கில் கூட பப்ளிசிட்டிக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அநாகரீகமானது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், நடிகர் ராகவா லாரன்ஸ் மீதான விமர்சனங்களையும், இந்த உலகம் யாரையும் விட்டு வைப்பதில்லை என்ற விரக்தியான கருத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு மூத்த கலைஞனின் இறுதி நிகழ்வில் இத்தகைய செயல் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

