காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனுக்கும், திருநங்கை விஜே வைஷ்ணவிக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராமில் கையில் செருப்புடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், நாஞ்சில் விஜயனின் ஆதரவாளர்கள் தன்னிடம் அநாகரீகமாகப் பேசுவதாகவும், தன்னை மனதளவில் காயப்படுத்துவதாகவும் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இனி தன்னைப்பற்றி அவதூறாகப் பேசுபவர்களைச் செருப்பால் அடிப்பேன் என்று வைஷ்ணவி எச்சரித்துள்ளார்.
அஞ்சலிக்கு ஃபர்ஸ்ட் நைட்டா?.. விஷாலின் கலாட்டாவால் சிரிப்பலையான மகுடம் செட்..!
கடந்த காலங்களில் தங்களுக்குள் இருந்த நெருக்கம், பண விவகாரங்கள் மற்றும் திருமணத்திற்குப் பிறகு நாஞ்சில் விஜயன் தன்னைத் தவிர்த்தது போன்ற விஷயங்களைச் சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருவருக்கும் இடையே நிலவும் இந்தப் பிரச்சனை தற்போது இணையத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

