Author: Prime Reporter

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர். மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த…

Read More

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் இதற்காக படு தீவிரமாக பயணியாற்றி வருகிறது. திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. மறுபக்கம் அதிமுக கூட்டணி இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவுடன் கூடட்ணி அமைத்துள்ளது. அதிமுக பொறுத்தவரை பாஜக, அமமுக, அன்புமணியின் பாமக உட்பட ஏராளமான கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக கூட்டணி இதுவரை உடையாமல் அப்படியே உள்ளது. இதனிடையே நாம் தமிழர் கட்சி, தவெக கட்சி தனியாக தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக, இதுவரை சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என அறிவிக்கவில்லை. இந்த நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று நடந்த மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,…

Read More

கர்நாடகாவில் உள்ள பிரபல ஐயப்பன் சுவாமி கோவில்கள், வழிபாட்டு நேரங்கள் மற்றும் சிறப்பு திருவிழாக்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கே.

Read More

காரம் நிறைந்த சில்லி எக் போண்டா ரெசிபி வைரல்; வீட்டிலேயே எளிதாக செய்யும் முறையும் சுவை ரகசியமும் அறிந்துகொள்ளுங்கள்.

Read More

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இதனிடையே அவர் திமுகவில் இணைவார் என்ற பேச்சும் கிளம்பியது. அதன்படி, எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள விலகல் கடிதத்தில், தான் நீண்ட காலமாக கழகத்தில் பயணித்து வந்ததாகவும், தற்போது சொந்த சூழ்நிலை காரணமாக கழக பணிகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், தனது ராஜினாமா மற்றும் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். விலகல் கடிதம் கொடுத்ததும், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த திமுக மாநாட்டில் பங்கேற்ற நிலோபர் கபில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

Read More

தயிருடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மற்றும் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் அவசியம்.

Read More

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட சசிக்குமார், சமீப காலமாக நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அயோத்தி, கருடன், நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அந்த வகையில் மை லார்ட் படம் நேற்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே பாசிட்டிவ் ரிசல்ட் வெளியாகியிருந்தது. ராஜூமுருகன் இயக்க, சைத்ரா கதாநாயகியாக நடித்திருந்தார். ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த படம் பெரும் எதிபார்ப்புக்கு இடையில் வெளியானது. படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெற்று வருவதால், படத்தின் விநியோகஸ்தரான சூர்யா, படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். #Suriya met #MyLord Team & appreciated for their work 👏♥️pic.twitter.com/FsNLRHWzhq— AmuthaBharathi (@CinemaWithAB) February 14, 2026 வெற்றிக்க வித்திட்ட படக்குழுவினரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

இறால் நெய் ரோஸ்ட் காரமான சுவையுடன் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான கடல் உணவு ரெசிபி ஆகும்.

Read More

சேலத்தில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய விஜய், அண்ணா வைத்திருந்த திமுகவை முதலமைச்சர் ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விமர்சித்தார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், முதலில் விஜய் வெளியே வர வேண்டும், நடிகையின் வீட்டை விட்டு வந்து பேச வேண்டும் என கூறினார். இதற்கு ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் நயினார் நாகேந்திரன் கண்ணியத்தை தவறவிட்டுள்ளார் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தவெக கொள்ளை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கடும் விமர்னங்களை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார். அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும்…

Read More

சிவன் அருளைப் பெற மகாசிவராத்திரி நாளில் பக்தர்கள் விரதம் இருந்து பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர் பக்தி உற்சாகம் அதிகரிக்கிறது.

Read More