ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீரம்பாளையம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தமிழக கட்சி கழகம் வெற்றி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் வைகைச்செல்வன் தங்களைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வைகைச் செல்வனுக்கு சீட்டும் தரவில்லை அவர் ஜெயிக்கவும் இல்லை அதனால் அவருக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் யார் யாருக்கு கருத்து சொல்ல வேண்டும் என தகுதி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழக வெற்றி கழகத்தில் பல பேர் இணைய போவதாகவும் அதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்து சென்றார்.

