கோவையில் கடந்த நவம்பர் மாதம் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் கருப்பசாமி (எ) சதீஷ், கார்த்திக் (எ) காளீஸ்வரன், தவசி (எ) குணா ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் நடைமுறை விபரங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதனையடுத்து, மேலதிக விசாரணைக்காக வழக்கை வரும் ஜனவரி 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

