நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்ப விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் பல்வேறு வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களுக்கு, நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் மூலம் மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “Drama at this age is embarrassing… Go make some money and find peace.” (இந்த வயதிலும் தேவையில்லாமல் டிராமா பண்ணுவது அசிங்கமானது… போய் ஒழுங்காக நாலு காசு சம்பாதித்து, மன நிம்மதியைத் தேடுங்கள்) என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்ரிபிள்ஸ் போய் போலீசில் சிக்கிய விஷால்.. சுவாரஸ்யமான சீக்ரெட்..!
இது தன்னைப்பற்றி வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிற்கு திரிஷா இவ்வாறு பதிலடி கொடுத்திருக்கலாம் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், இதுகுறித்து “WHAT A PRIVILEGE IT IS – To be overwhelmed by a life you once prayed for.” (ஒரு காலத்தில் நாம் எதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தோமோ, அதே வாழ்க்கை இப்போது நமக்குக் கிடைத்து, அதில் நாம் மூழ்கி இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்) என்று தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். சர்ச்சைகள் மற்றும் வதந்திகளைப் பொருட்படுத்தாமல், தனது வெற்றிப் பயணத்தில் கவனம் செலுத்தும் திரிஷாவின் இந்தத் துணிச்சலான பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.


