‘லுலு மாபியா’ தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளைத் தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்திற்குத் கொண்டு சென்றதாகவும், அப்போது தமிழ்நாட்டில் மகளிர் ஆணையத்தின் பிரதிநிதியாக இருந்த குஷ்புவிடம் உதவி கோரியும் அவர் தலையிடவில்லை என்றும் சமூக ஆர்வலர் தமிழச்சி எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..
தமிழச்சியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆவேசமாகப் பதிலளித்த நடிகை குஷ்பு, “தைரியம் இருந்தால் நேரில் வா, உனக்காக செருப்படி ரெடியாக இருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், உன்னுடைய செயல்கள் பழிவாங்கும் எண்ணம் கொண்டது என்றும், மகளிர் ஆணையத்தின் செயல்முறைகளைப் புரிந்து கொள்ளாமல் தன்னை விரல் நீட்டிப் பேச யாருக்கும் உரிமை இல்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
Vaa ma. If you have the guts come here and face me. செருப்பு அடி உனக்காக ரெடி இருக்கு. Don't call yourself an activist when your actions are as per your whims and cries. Or personal vendetta based. NCW is not your அப்பன் வீட்டு சொத்து to take actions when you want to. Learn… https://t.co/tM4dwJikAm
— KhushbuSundar (@khushsundar) August 7, 2026
இருவருக்கும், இடையே நடைபெற்ற இந்த நேரடி வார்த்தைப் போர் சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

