பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை. இவர் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக சவுக்க சங்கரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான அவரது மனைவி ஆர்த்தியும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சிறுவன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பத்தில் உள்ள தனது தாய்வழி தாத்தா செந்தாமரைக் கண்ணன் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்தான்.
கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!
தாத்தா வீட்டில் வசித்து வந்த சிறுவன் தியோ ஆழிசை, அங்கு திடீரெனத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே மற்றும் குடும்பத்தாரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த மரக்காணம் காவல்துறையினர் உடனடியாகச் சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்தத் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

