மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம் மேற்கொள்வது மற்றும் அவருடன் செல்லும் 13 பேர் கொண்ட குழு குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
காவிரி நதி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பெங்களூரு செல்கிறார்.
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.. முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
அங்கு கர்நாடக முதலமைச்சரை சந்தித்து அவர் பேசவுள்ளார். இந்தப் பயணம் குறித்துத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு விவாதித்தனர்.
முதலமைச்சருடன் பெங்களூரு செல்லவுள்ள 13 பேர் கொண்ட சிறப்புக் குழுவின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் மற்றும் மூத்த வழக்கறிஞர் உமாபதி உள்ளிட்டோர் இந்தக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

