இசையமைப்பாளர் டி. இமான் ‘நிறம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, துரோகம் குறித்த தனது கருத்து மற்றும் தேசிய விருது குறித்து பேசியது வைரலாகி வருகிறது. ‘நிறம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் டி. இமானிடம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கடந்த காலங்களில் அவர் எதிர்கொண்ட துரோகம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “வாழ்க்கையில் யாருக்குத்தான் துரோகம் நடக்காமல் இருக்கிறது? அது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் நடக்கக்கூடிய விஷயம்தான்” என்று குறிப்பிட்டார். மேலும், அந்தப் படத்தில் பா. விஜய் எழுதிய துரோகம் குறித்த வரிகள் பலரின் வாழ்க்கையோடு பொருந்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
காலில் விழுந்த விவகாரம்.. தனுஷைக் குறிவைக்கும் நெட்டிசன்கள்..!
தேசிய விருதுகள் மற்றும் அது தொடர்பான விவாதங்கள் குறித்துப் பேசிய இமான், “இந்தப் படம், அந்தப் பாடல் என்று மட்டும் பார்க்காமல், தேசிய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றால், அதை ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாகவே பார்க்க வேண்டும்” என்றார். மேலும், தகுதியானவருக்கா விருது கிடைத்தது என்ற விவாதம் எப்போதுமே தொடரும் என்றும், அதில் முடிவிருக்காது என்றும் அவர் கூறினார்.

