வண்ணமயமான அப்பளங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் ஒரு தின்பண்டம். ஆனால், இவற்றின் பின்னணியில் உள்ள உடல்நல பாதிப்புகள் குறித்து எச்சரிக்கைச் செய்தி, அப்பளங்களுக்குச் சேர்க்கப்படும் கண்களைக் கவரும் வண்ணங்கள் (எ.கா: ரோடமைன் பி – Rhodamine B), அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இவை துணி சாயம் போன்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களாகும். இந்த வேதிப்பொருட்களைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதர உள் உறுப்புகளில் நச்சுத்தன்மை ஏற்பட்டு தீவிர பாதிப்புகளை உண்டாக்கலாம்.
ஃபேட்டி லிவர் பிரச்சனைக்கு தீர்வு.. கொழுப்பு கல்லீரல் நோய் இயற்கையாக சரி செய்யலாம்..!
நீண்டகாலமாக இந்தச் செயற்கை நிறமூட்டிகளைக் கொண்ட உணவுகளைச் சாப்பிடுவது, உடலில் செல்கள் சிதைவடைந்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. செயற்கை வண்ணங்கள் மற்றும் தரம் குறைந்த எண்ணெயில் பொரிக்கப்படும் இந்த அப்பளங்கள், குழந்தைகளின் செரிமான மண்டலத்தைப் பாதிப்பதோடு, ஒவ்வாமை (Allergy) மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.
செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட அப்பளங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் வெள்ளை அப்பளங்களையோ அல்லது சிறுதானிய அப்பளங்களையோ பயன்படுத்துவது சிறந்தது. கடைகளில் வாங்கும் போது, உணவு பாதுகாப்புத் தரச்சான்றிதழ் (FSSAI) பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டும் தேர்வு செய்யவும். குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வண்ண அப்பளங்களுக்குப் பதிலாக ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளைப் பழக்கப்படுத்துங்கள்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

