நடிகர் விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் இருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் தணிக்கை வாரியத்தின் (CBFC) இழுபறிகளுக்குப் பிறகு, ‘ஜன நாயகன்’ படத்திற்கு தற்போது ‘A’ (பெரியவர்களுக்கானது) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காகப் படத்தில் 12 காட்சிகள் மற்றும் வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, டாக்டர் அம்பேத்கரின் உருவம் இருந்த காட்சி, கட்சியின் பெயர் (TVK) இடம்பெற்ற வசனங்கள் மற்றும் இந்தியக் கொடி கீழே விழும் காட்சி போன்றவைகள் நீக்கப்பட்டுள்ளன. தணிக்கை சான்றிதழ் கிடைத்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் விநியோக உரிமையைப் பெற்றுள்ள ‘அஹிம்சா என்டர்டெயின்மென்ட்’ (Ahimsa Entertainment) நிறுவனம், இப்படம் ஜூலை 24, 2026 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இறுதிச் சடங்கின் போது அமைதி காத்தது ஏன்?.. பார்த்திபனின் உருக்கமான பதிவு..!
இதற்கான முன்கூட்டிய டிக்கெட் முன்பதிவுகளும் அங்கு தொடங்கிவிட்டன. ‘ஜன நாயகன்’ படத்தைத் தயாரித்த KVN புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனம், படத்தின் வெளியீடு மற்றும் சான்றிதழ் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.
இது திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஜனவரி 9, 2026 அன்று வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கை சிக்கல்கள் காரணமாகத் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் படம் இணையத்தில் கசிந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், இந்தப் படத்தின் வெளியீடு மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. கேவிஎன் நிறுவனம் விரைவில் இது குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

