சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்திற்கு ‘தர்மன்’ என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இதன் பிரம்மாண்ட டைட்டில் லான்ச் விழாவில் ரஜினிகாந்த் தனது பாணியில் கலகலப்பாகவும் அதிரடியாகவும் பேசினார். “மேடையில் பேச அழைத்தாலே பயமாக இருக்கிறது, நான் பேசினால் ஏதாவது ஒரு பஞ்சாயத்து ஆகிவிடுகிறது.
சரி, பேசாமல் அமைதியாக இருந்தால் ‘வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறார்?’ என்று கிண்டல் செய்கிறார்கள்” என ரஜினி நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும், “நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது” என்ற உண்மையைப் புரிந்து கொண்டதாகப் பேசினார்.
சட்டத்தைக் கையில் எடுத்த நடிகர் ரவி மோகன்.. காவல்துறை கொடுத்த டோஸ்..!
‘தர்மன்’ படத்திற்கு அஸ்வந்த் மாரிமுத்து 4-வது இயக்குநராகத்தான் உள்ளே வந்தார் என்று ரஜினி ரகசியம் உடைத்தார். முதலில் ரவிக்குமார், அடுத்து சுந்தர் சி, பின்னர் சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் பேசி, சில காரணங்களால் தள்ளிப்போய், இறுதியாக அஸ்வந்த் மாரிமுத்துவிடம் கதை ஓகே ஆனதாகக் கூறினார்.
‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் முதலில் ஜெய்சங்கர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில், தன்னை நடிக்குமாறு இயக்குநர் பாரதிராஜாவிடம் பரிந்துரைத்ததே கமல் தான் என்ற பழைய நினைவை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

