கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா தரப்பில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஜய் தரப்பில் இதுவரை எந்தவொரு எதிர்ப்போ அல்லது மறுப்பு மனுவோ தாக்கல் செய்யப்படவில்லை. இது அவர் சமரசத்திற்கு விரும்புவதைக் காட்டுவதாக அரசியல் மற்றும் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராகக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இருவரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் (Email ID) முகவரிகளைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் என்ற முறையில் விஜய்யின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 7 அன்று ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் இல்லாத மூடிய அறைக்குள் நீதிபதி இருவரிடமும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை (கவுன்சிலிங்) நடத்த அதிக வாய்ப்புள்ளது.
சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!
நீதிமன்றத்திற்கு வெளியே இரு குடும்பத்துப் பெரியவர்களும், ஈகோக்களைக் கடந்து இவர்களைச் சேர்த்து வைப்பதற்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. விஜய்யும் இதற்குச் சாதகமாகவே இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த விவகாரம் சுமுகமாக முடிவடைய வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.

