இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து, தேனியில் உள்ள அவரது சொந்த நிலத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சேலம் RR பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் மிகவும் எமோஷனலாகப் பேசினார்.
அவர் பேசியதாவது,
“எனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, அரசியல் மூன்றிற்கும் பாரதிராஜா அவர்கள் மிக முக்கியமானவர். அவருக்கு அரசு மரியாதை அளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள். அவர் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தேனியில் ஏழைகளுக்குக் குறைந்த விலையில் பிரியாணி வழங்க வேண்டும் என்ற அவரது 10 ஆண்டுக்கால ஆசையை என்னிடம் பகிர்ந்துள்ளார். இன்று அவர் விரும்பியபடியே அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறார்.
இலங்கைத் தமிழர்கள் போராட்டக் களத்தில் தொடங்கிய எங்களது நட்பு, இன்று நான் இலங்கையில் நிறுவனம் நடத்தும் அளவுக்கு எனக்குத் தைரியம் தந்தது. திரையுலகில் எனக்கு இத்தனை நண்பர்கள் கிடைக்க அவரே காரணம்.
அமைச்சரை சந்தித்த வேடன்.. இரட்டை முகத்தை மீண்டும் தோலுரித்த சின்மயி..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னது போல, அவர் சொன்னால் அனைவரும் கட்டுப்படுவார்கள்; அந்தளவுக்கு தைரியமானவர். தனது கடைசி காலத்தைக் கணித்தே வாழ்ந்தார். வீட்டில் வேலை செய்பவர்களைத் தன் பிள்ளைகளாகவும், தாயாகவும் நினைத்துப் போற்றினார்.
கடைசி காலத்தில் அவரது குடும்பத்தினர் அவரைப் பார்த்துக் கொள்ளவில்லை என்பது பொய்; மருத்துவமனையில் உயர் சிகிச்சை தந்தது வரை குடும்பத்தினர்தான் அனைத்தையும் செய்தார்கள். இறக்கும் போது மட்டுமே உடன் யாரும் இருக்க முடியவில்லை.”
சேலம் RR பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் மிகவும் எமோஷனலாக பகிர்ந்துக்கொண்டார்.

