நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பேசும்போது அவர் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என் மகன்களோ பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம். சென்னையில், மிக பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம் தான். கலைஞர் வாழ்ந்த அந்த இடம் தான் ஒளி பிறந்த இடம் என தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து, தனுஷின் பெயரை சுற்றி அரசியல் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், கஸ்தூரிராஜாவின் பேச்சை பகிர்ந்து பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சில ஆண்டுகளாக வெள்ளை வேட்டி சட்டை, ருத்ராட்சர கொட்டை, மேடைகளில் பூமர் தத்துவங்கள் அனுதாபம் தேடும் சென்டிமென்ட் கதைகள் என அரசியலுக்கு தயாராகிவிட்டார் சுள்ளான்.
தந்தை பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்?.. அதிர்ச்சியை ஏற்படுத்திய புதிய தகவல்..!

இப்போது, விஜய் வென்றதால் அடுத்து மக்கள் தன்னையும் முதல்வர் ஆக்குவார்கள் என நம்புகிறார் என எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவு பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. முன்னதாக, தனுஷ் இசை வெளியீட்டு விழாக்களில் பேசும் போது தத்துவ வார்த்தைகளை பேசுவதை வழக்கமாக்கினார். முக்கியமாக, ரஜினியின் பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட விஷயங்களை செய்திருப்பார். இதன் காரணமாக அவரை சிலர் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். ஆனால், அதையெல்லாம் தனுஷ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

