வெயில் காலம் வந்து விட்டாலே ஆரோக்கிய பிரச்சனைகள் பல வகையாக வந்து அவதிக்கு உள்ளாக நேரிடும். முக்கியமாக, உடல் சூடு மலச்சிக்கல் சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் போன்றவற்றால் ஏராளமானோர் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான வெப்பநிலை தான். இந்த பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், கோடையில் உடலை நீரூற்றுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு இளநீர், தர்பூசணி, நொங்கு, முலாம்பழம் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

இது தவிர ஒரு அருமையான மற்றொரு பொருளும் உள்ளது. அதுதான் பாதாம் பிசின். பாதாம் மரங்களின் பட்டைகளில் இருந்து வடியும் பிசினை உலர வைத்து பெறப்படுவது பாதாம் பிசின் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. சொல்லப்போனால், இது பாரம்பரியமாக நம் முன்னோர்களால் கோடை காலத்தில் அதிகம் உட்கொண்டு வந்த பொருள். இது ஆயுர்வேத மருத்துவத்திலும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக பாதம் பிசின் விலை மலிவில் கிடைக்கக்கூடியது நாட்டு மருந்து கடைகளில் வெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும். அளவில் குறைவான ஒரு அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்த பொருள்.

எப்படி சாப்பிடலாம்?
ஐந்து கிராம் பாதம் பிசினை எடுத்து இரவு தூங்கும் ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த பாதம் பிசின் ஜெல் போன்று இருக்கும். அதை மற்றொரு டம்ளரில் எடுத்து போட்டு நீரை ஊற்றி ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், காலையில் ஒரு டம்ளர் நீரில் பாதாம் பிசினை சேர்த்து ஊற வைத்து மாலையில் மோரில் இந்த பாதாம் பிசினை சேர்த்து குடிக்கலாம்.
மலச்சிக்கல் நீங்கும்

ஊறவைத்த பாதாம் பிசின் உடன் தேன் கலந்து குடிக்கும் போது கோடையில் சந்திக்கும் மலச்சிக்கல் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். எனில், பாதாம் பிசினில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்தால், பாதாம் பிசினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் உட்கொண்டு வர நிவாரணம் கிடைக்கும்.
உடல் சூடு குறையும்
பாதாம் பிசினை தினசரி உடலில் சேர்த்து வருவதால் உடல் சூட்டை குறைக்கலாம்.
செரிமான பிரச்சனை
பாதாம் பிசினை ஊற வைத்து உட்கொள்ளும்போது நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் பலன் வேற.. உடல் சூட்டை அடியோடு விரட்டும் ‘அந்த’ ஒரு ஸ்பூன்..!

பாதாம் பிசினை யாரெல்லாம் சாப்பிடலாம்
இந்த பாதாம் பிசினை சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். கோடையில் விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு கூட இதை சாப்பிட கொடுக்கலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பாதம் பிசினை சாப்பிடும் போது தினமும் தேன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

