90ஸ் காலகட்டத்தில் கொடி பறந்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை மும்தாஜ். இவர் தற்போது நடிப்பை விட்டு விட்டு ஆன்மீக வாழ்க்கையை தேர்வு செய்து அல்லாவுக்காக வாழ்ந்து வருவதாக மனம் விட்டு பேசி வருகிறார்.
இந்நிலையில் பேட்டி அளித்த அவர் நான் ஒரு நடிகையாக இருந்தபோது என்னுடைய வாழ்க்கையும் கரியரும் இயக்குனர்கள் கையில் தான் இருந்தது. ஒரு உடையை என்னிடம் காட்டுவார்கள். அதே உடை சூட்டிங் ஸ்பாட்டில் இன்னும் சிறியதாக இருக்கும் என்ன சார் ஏன் இவ்வளவு சிறிய உடை என்று கேட்டால் இயக்குனர் தான் குறைக்க சொன்னார் என்று கூறிவிடுவார்கள்.

இயக்குனர் கிளாமர் சாங் மேடம் இப்படி காஸ்ட்யூம் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என கூறிவிடுவார்கள். நான் ஒரு நடிகை இயக்குனர் சொல்வதை நான் கேட்க வேண்டும் அதுதான் உண்மையான ஒடுக்கு முறை ஒரு கிரியேசன்காக ஒரு வாய்ப்புக்காக மற்றவர்களின் பேச்சை கேட்டு நான் வாழ்ந்திருக்கிறேன். இன்று அந்த வாழ்க்கையில் இருந்து விலகி அமைதியாக வாழ்கிறேன்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு.. முதலமைச்சர் விஜய்க்கு ‘புளூ சட்டை’ மாறன் கேள்வி..!
மேலும், நான் ஷார்ட் டிரஸ் போட்டுக் கொண்டு தெருவில் ஆடி இருக்கிறேன். இப்போது அபாயா அணிந்தும் வெளியில் செல்கிறேன். இந்த இரண்டு பார்வைகளும் வேறுவேறாக இருப்பதை என்னால் உணர முடிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மும்தாஜின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது.

