திருச்சியில் சில தினங்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் அவரது காதலியை பொது இடத்தில் கல்லை வைத்து மிகவும் மோசமாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான, வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியின் புகைப்படங்களை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
திரையரங்குகளில் ‘கருப்பு’ வசூல் வேட்டை.. அதிர வைத்த மாஸ் கலெக்ஷன்..!
இதனால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று சாலையில் கதறி அழுது போராட்டம் செய்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையதளத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில்,
திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய். இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? இந்த தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களை சந்திக்க வர வேண்டுமா அல்லது சந்திக்கவே மாட்டீர்களா?
காடுமையாக விமர்சித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த கேள்விகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய்.
— Blue Sattai Maran (@tamiltalkies) May 19, 2026
இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?
இந்த தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களை சந்திக்க வர வேண்டுமா அல்லது சந்திக்கவே மாட்டீர்களா? pic.twitter.com/Hw4CRhVxxb

