நேபாள நாட்டில் கடந்த 8,9,10 ஆகிய தேதிகளில் SGADF ( பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு) சார்பில் இந்தியா மற்றும் நேபாளம் ஒருகிணைந்த சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில், இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்பட நாடுகள் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டன. இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட நமது கோவை வீரர்கள் 22 பேர் சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் கலந்து கொண்டு மொத்தம் 25 தங்கப்பதக்கமும், 5 வெள்ளிபதக்கமும் மேலும் யோகா போட்டியில் 1 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
வந்தே பாரத் கண்ணாடியை உடைத்த சிறார்கள்.. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்..!
இதனை சிவம் தாக்கூர் பொதுச் செயலாளர் – பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு சம்மேளனம் இந்திய அணியின் கவுண்டி பிஸ்டல் ஷூட்டர் மற்றும் தமிழ்நாடு செயலாளர் முத்துராஜ் அவர்கள் பரிசளித்து பாராட்டினார்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வினோத் குமார், வெங்கடேஷ், பாண்டீஸ்வரி ஆகியோர் ரயில் மூலம் கோவை வந்து அடைந்தனர். கோவை விமான நிலையத்தில் வந்த அனைவரையும் பெற்றோர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக வரவேற்பளிக்கப்பட்டது.

