நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது.

இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

இப்பிரிவிற்கு பிறகு கெனிஷாவுடன் ரவிமோகன் மிகவும் அதிகமாக நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாகவே தனது மகன்களுக்கு சிறந்த தாயாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஆர்த்தி ரவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதாவது, ஆர்த்தி ரவி தாக்கல் செய்த வழக்கில் மனுவில் தன்னை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட கெனிஷாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாடகி கெனிஷா, ஆர்த்தி ரவி பற்றி தெரிவிக்கும் கருத்துகள் அவரைமான உளைச்சலுக்கு ஆளாகியதாக வாதிட்டார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என் செந்தில்குமார் பாடகி கெனிஷா ஏற்கனவே, சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவதூறு பதிவுகள் மற்றும் கருத்துக்களை உடனடியாக நீக்க உத்தரவிட்டு உள்ளார். மேலும், ஆர்த்தி குறித்து பாடகி கெனிஷா எந்தவிதமான கருத்துகளையும் பகிர கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதே நேரம், ஆர்த்தி ரவிவை தொடர்ந்த வழக்கு குறித்து கெனிஷா பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

