தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. எப்பொழுதுமே பிரேக்கிங் நியூஸ் ஆகவே காத்துக் கொண்டிருக்கிறது. திரையுலகம் அதைவிட பரபரப்பாக இயங்கி வருகிறது. மொத்த திரை உலகும் சூர்யாவின் கருப்பு திரைப்படம் மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
இது மட்டும் இல்லாமல் படம் மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் ஆர், ஜே பாலாஜி நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ஆனால், சூர்யாவை படம் வெளியாகவில்லை. படத்தின் தயாரிப்பாளரும் ரசிகர்கள் மத்தியில், மன்னிப்பு கேட்டு நள்ளிரவு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இயக்குனர் ஆர்ஜே பாலாஜி படம் வெளியாகும் என்ற நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
தற்போது அழுது கொண்டே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். விஜய் ரசிகர்களும் இணையவாசிகளும் சிலர் சூர்யா சார் நீங்க முதலமைச்சர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து கொள்ளுங்கள். திருச்சி கிழக்கில் நீங்கள் தான் வேட்பாளர் என்று எல்லாம் தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோல், விஜியின் நண்பரும் நடிகருமான ஸ்ரீமான் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் பதிவிற்கு பிரபு பிரதர் கருப்பு படம் மொத்த பட குழுவினரின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் படமாக இருக்கும். கடுமையான முயற்சிகள் எப்போதும் தோற்பதில்லை. கடந்த பத்து நாட்களில் நடைபெற்ற சில கசப்பான அனுபவங்களை மறந்து விடுங்கள். நாங்கள் அனைவரும் கருத்து படத்தை திரையரங்கில் கொண்டாட எங்களது சக்தியை சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். சூர்யா பிரதர் படம் பட்டையை கிளப்ப போவது உறுதி என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Due to unavoidable reasons 9am shows will be cancelled for Karuppu. Our sincere apologies to everyone!
— SR Prabu (@prabhu_sr) May 13, 2026

