தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.
தமிழக சட்டசபையில், நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது தமிழக சட்டசபையில், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடைபெற்றது. உறுப்பினர்கள் எழுந்து நின்று நிற்க வைத்து வாக்கெடுப்பு நடக்கப்பட்டது. முதல் டிவிசனில் 30 எம் எல் ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அளித்தனர்.
இரண்டாவது டிவிசனில் 42 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவளித்தனர். மூன்றாவது டிவிஷனில் 46 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நான்காவது டிவிஷனர் எஸ் பி வேலுமணி தரப்பு 25 அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஐந்து மற்றும் ஆறாவது டிவிஷன் படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், தமிழக வெற்றி கழக அரசை ஆதரிப்பதாக 144 பேர் கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக்கழக அரசு வெற்றி பெற்றது. இதனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தற்போது, தமிழகத்தில் தொடரும் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவில் ஆளுநருக்கு சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் தெரிவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

