தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது ம.ஜ.க.வின் தமிமுன் அன்சாரி உரையாற்றினார். அப்போது அவர்,” 4 நாட்களில் பல நல்ல விஷயங்களை முதலமைச்சர் விஜய் செய்துள்ளார். தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, ஜோதிடத் துறையை முறைப்படுத்த அல்லது அரசு உடைமையாக்க முயற்சிப்பதாக வெளியான தகவலையடுத்து, சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மைக்கு இது எதிரானது எனக்கூறி தமீமுன் அன்சாரி தலைமையிலான MJK மற்றும் ஈ.ஆர். ஈஸ்வரன் தலைமையிலான KMDK ஆகிய கட்சிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த விவகாரம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

