தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, தமிழக வெற்றிக்கழக அமைச்சர் கீர்த்தனா சான்றிதழை எடுத்து வராததால், அவர் பதவியேற்க வில்லை. அவரைத் தொடர்ந்து, திமுக அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவி ஏற்று கொண்டனர்.
முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!
அமைச்சர் கே சி கருப்பண்ணன் சான்றிதழை மாற்றி எடுத்து வந்ததால், பதவி ஏற்க முடியாமல் போனது. இந்த நிலையில், பதவி ஏற்க அழைத்த போது சி.வி சண்முகம் சட்டசபையில் இல்லை. சட்டசபைக்கு வந்த சிவி சண்முகம் பாதியிலே புறப்பட்டு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கீழ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்திப்பது நிலவி வருவதால், மீண்டும் கட்சி இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

