தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலினை தற்போதைய முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து ஆல்வார்பேட்டையில் உள்ள மு க ஸ்டாலின் இடத்திற்கு விஜய் செல்ல இருப்பதாகவும், இது மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அண்ணாநகர் இல்லத்தில் சந்திக்க இருப்பதாகவும், இதே போல மூத்த அரசியல் கட்சி தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

