தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பெரும்பான்மை பலத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முன்னதாக, தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. தமிழக வெற்றிக்கழகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் 118 இடங்கள் தேவைப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
இதை அடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில், தமிழக்கு வெற்றி கழகம் ஈடுபட்டது. பெரும்பான்மைக்கு இன்னும் இரண்டு இடங்களை தேவை என்ற நிலையில், தமிழக வெற்றிக்கழக தரப்பிலிருந்து விசிக தலைவர் திருமாவளவனிடம் ஆதரவு தருவதாக கூறப்பட்டது. திருமாவளவன் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆளுநர் இன்று மாலை கேரளா புறப்பட்டு செல்ல உள்ளார் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் ஆன இவர் கேரக மாநிலத்தில் ஆளுநனராக இருந்து வருகிறார். தமிழகத்தை போலவே கேரளாவில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கேரளாவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநர் தற்போது கேரளா செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

