விஜயிடம் மனைவி சங்கீதா விவாகரத்து வேண்டி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் ஜூன் 15ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் பேட்டி அளித்து இருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, விஜய்க்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள்ளும் அவரது ரசிகர்களுக்குள்ளும் முதல் முறையாக விதைத்தவர் என்றால், அது விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான்.

அதனால், தான் அவர் விஜயின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட பணிகளை செய்ய வைத்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆனால், தனது அரசியல் பிரவேசத்தில் தந்த எஸ் ஏ சி பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை.

விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அவரைச் சுற்றி எக்கச்சக்கமான பஞ்சாயத்துகளும் பிரச்சனைகளும் நாள்தோறும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அதில், தலையாயப் பிரச்சனை என்றால், மனைவி சங்கீதா தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனு தான். விஜய் மீது அந்த மனுவில் கடுமையான குற்றங்களை முன்வைத்து அவர் விவாகரத்து கூறியிருந்தார்.
ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!
தற்போது, எஸ் ஏ சந்திரசேகர் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், நான் அவர் என் மனைவி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கும் போது, நான் அரசியலுக்கு வருகிறேன் என ரொம்ப சாதாரணமாக கூறினார். அவர் அப்படித்தான் பெரிய விஷயத்தை கூட ரொம்ப சாதாரணமாக சொல்வார்.

அப்போது, நான் இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. அவர்களை எதிர்த்தவர்களை இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை அவரிடம் கொடுத்தேன். நான் அதை எதிர்கொள்கிறேன் அப்பா என்று சொல்லிவிட்டார். அதேபோல், அரசியலில் கேரக்டர் படுகொலையும் செய்வார்கள்.

விஜய் அவருடைய குடும்பத்திற்கு எதிரி அப்பா, அம்மாவுக்கு எதிரி என்ற பிம்பத்தை செட் செய்கிறார்கள். அது அவர்களுக்கு கைவந்த கலை எப்போதோ நடந்து முடிந்த சமரசம் ஆகி கையெழுத்தாகி முடிந்து போன விஷயத்தை இப்போது, ஏன் சரியாக வெளியே கொண்டு வருகிறார்கள். இதையெல்லாம், அவர்கள் ஆழமாக செய்கிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அதற்கான வாய்ப்பை கொடுக்கிறார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்து இருந்தார்.

