கொளுத்தும் சம்மர் காலத்தில் நமது சருமம் மிகவும் சோர்வடைந்து விடுகிறது. இதனால், முகம் கருத்து சுருக்கங்கள் வர ஆரம்பிக்கிறது. நமது சருமம் எப்போதுமே தளர்வு இல்லாமல் இளமையாகவும், இறுக்கமாகவும் இருக்க கொலாஜன் என்ற புரதம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
சில எளிய பொருட்களை வைத்து இந்த கொலாஜனை நாம் இயற்கையாக அதிகரிக்க முடியும். இந்த கோடையில் உங்கள் சருமத்தை குளிர்ச்சியாகவும், அழகாகவும் மாற்ற அருமையான ஹெல்த் ட்ரிங்க்ஸ் உள்ளன.
சோற்றுக்கற்றாழை மற்றும் நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. அதுபோல், இது கொலாஜன் உற்பத்தியை தூண்டும் ஒரு அற்புதமான பொருளாகும். இதனுடன் உங்களுக்கு நல்ல குளிர்ச்சியை தரும் கற்றாழையை சேர்த்து ஜூஸ் அடித்து குடித்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் கொடுக்கும். இதனை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிப்பது மிக சிறந்த பலனை கொடுக்கிறது. குறிப்பாக, சக்கரைக்கு பதிலாக சிறிது தேன் கலந்து கொள்ளலாம்.
சியா விதை மற்றும் எலுமிச்சை

சம்மர் சீசனுக்கு ஏற்ற மிகவும் ஒரு சிம்பிளான பானம் இது. ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் சிறிது நேரம் ஊறவைத்த சியா விதைகளை கலந்து குடிக்கலாம். சுவைக்கு சிறிது புதினாவையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாத்து எப்பொழுதுமே பிரசாக வைத்திருக்க உதவுகிறது.
ஆரஞ்சு மற்றும் பப்பாளி

ஒரு சில பழங்களை ஜூஸ் செய்து குடிப்பதை விட அப்படியே சாப்பிடுவது சில சமயங்களில் நல்லது. பப்பாளியில் இருக்கக்கூடிய என்சைம் இறந்த செல்களை நீக்கி புது செல்களை உருவாக்குகிறது. அதேபோல், ஆரஞ்சில் இருக்கக்கூடிய சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு தேவையான கொலாஜனை அதிக அளவில் கொடுக்கிறது. இவை இரண்டையும் சேர்த்து அரைத்து குடித்தால் உங்கள் முகம் கண்ணாடியை போல் பளபளக்க தொடங்கிவிடும்.
இனி பார்லர் போகத் தேவையில்லை.. கோடை கால ஸ்பெஷல் டிப்ஸ்..!
பீட்ரூட் மற்றும் கேரட்

முகத்திற்கு இயற்கையான ஒரு பிங்க் நிறத்தை கொடுக்க வேண்டுமானால், இந்த ஜூஸ் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. கேரட்டில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் பீட்ரூட்டில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து ரத்தத்தை சுத்திகறித்து சரும துளைகளுக்குள் நல்ல ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. இதனால், வெயிலால் ஏற்படும் சருமக்கறைகள் நீக்கப்பட்டு சருமம் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால், நீங்களே அந்த மேஜிக்கை உணர்வீர்கள்.
இளநீர் மற்றும் சப்ஜா

பொதுவாக சம்மர் காலத்தில் உடலை நீரோட்டமாக வைத்துக் கொள்வதற்கு சரும பராமரிப்பு மிக முக்கியமானது. சாதாரண தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக இயற்கை தந்த வளமான இளநீரை குடிக்கலாம். அதனுடன் உடலில் சூட்டை தணிக்கும் சப்ஜா விதைகளை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், உடலுக்கு இரட்டிப்பு பயன்கள் கிடைக்கும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி எப்போதும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. செயற்கையான அழகு சார்ந்த பொருட்களை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் இவ்வாறு ஜூஸ்களை குடிப்பதன் மூலம் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சூப்பரான பானங்கள் இரண்டும் சேர்ந்தால் கோடையில் நீங்களும் ஜொலிக்கலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

