சுதந்திரபோராட்ட வீரர் தீரர் சின்னமலை அவர்களின் 221 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் அவரது மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலை அவர்களின் சிலைக்கும், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த திருவுருவ படத்திற்கும் மாலையிட்டு அஞ்சலி செலுத்துகிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. முன்னதாக ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து ஓடாநிலை, அருகில் உள்ள வடவள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பான வரவேற்பளித்து சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் மணி மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர்.

