தமிழக முதலமைச்சர் விஜய் தனது அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றியது மற்றும் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ அலுவலகத்தை தலைமைச் செயலகத்திற்குள் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு (Namakkal Kavignar Maaligai) மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இந்த அலுவலக மாற்றம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த காலத்தில் தான் ஆட்சியில் இருந்தபோது எடுத்த சில முடிவுகள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் தன் தரப்பு வருத்தங்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
முதல்வர் விஜயின் இந்த திடீர் அலுவலக மாற்றமும், அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் எதிர்வினையும் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!
முன்னதாக, தான் முதலமைச்சராக இருந்த காலத்தில், வாஸ்து மற்றும் ஜோதிடப்படி அலுவலக அறையை மாற்றினால் அதிகாரம் நிலைத்து நிற்கும் என்று ஜோதிடர் கூறியதை எடப்பாடி பழனிசாமி அப்போது ஏற்கவில்லை. “காலம்காலமாக முதலமைச்சரின் அறை இதுதான் என்றிருக்கும்போது, அதனை மாற்றினால் தேவையற்ற அரசியல் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் எழும்” என்று நினைத்து அந்த யோசனையைத் தவிர்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றியதை அடுத்து, தன் குடும்பத்தினரிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அன்றைக்கே ஜோதிடர் சொன்னதை ஏற்று வாஸ்துபடி அலுவலகத்தை மாற்றியமைத்திருந்தால் ஆட்சியைத் தக்க வைத்திருக்கலாமோ?” என்று ஆதங்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், இத்தகைய காரணத்தினால்தான் அவர் தனது வீட்டையும் மாற்றினாரோ என்ற சந்தேகங்களும் அதிமுக மேல்மட்ட தலைவர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

