நடிகை யாஷிகா ஆனந்த் தனது பிரேக்-அப் மற்றும் ரிலேஷன்ஷிப் குறித்துப் பேசிய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தான் தற்போது முழுமையாகச் சிங்கிளாக இருப்பதாகவும், கடந்த 5-6 ஆண்டுகளாக எந்தவிதமான காதல் உறவிலும் (Relationship) தான் இல்லை என்றும் யாஷிகா தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது கடைசிப் பிரேக்-அப்புக்குப் பிறகு காதலின் மீது தனக்கு ஈர்ப்பு போய்விட்டதாகவும், ரிலேஷன்ஷிப் மற்றும் காதல் போன்ற விஷயங்கள் இப்போது தனக்குத் தேவையில்லை என்றும், தன்னைத் தானே நேசித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட சொத்து அறக்கட்டளை சொத்து ஆகாது.. மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு..!
தான் கடந்த 5 ஆண்டுகளாக வெளியிலுள்ள எந்தப் பார்ட்டிக்கும் செல்வதில்லை என்றும், இருப்பினும் தனது வீட்டிலேயே பார் செட்டப் மற்றும் மியூசிக் போன்ற வசதிகள் நண்பர்களுக்காக இருந்தாலும், தான் மது அருந்துவதில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
நண்பர்கள் மற்றும் இயக்குநர்கள் நம்பவைத்து ஏமாற்றியது குறித்தும், கதை ஒன்று கூறிவிட்டு செட்டுக்குச் சென்றால் கதாபாத்திரமே மாறியிருக்கும் கசப்பான அனுபவங்கள் குறித்தும் அவர் அந்தப் பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

