பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2026 அன்று இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், நிரந்தரமாகத் தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
இல்லத்தரசிகளே குஷியாகுங்க.. ஏறிய வேகத்தில் சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை..!
இத்திட்டத்திற்குப் பாலின பாகுபாடு கிடையாது. ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவருக்கும் இந்த மோதிரம் வழங்கப்படும். பிறப்பு பதிவுகள், ஆதார், மற்றும் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) எண்களுடன் இணைக்கப்பட்ட தாயின் RCH ஐடி மூலம் தகுதிகள் சரிபார்க்கப்படும்.
இத்திட்டத்திற்காக 4.41 லட்சம் (4,41,667) தங்க மோதிரங்களை (1 கிராம் எடையுள்ள, 22 கேரட் 916 ஹால்மார்க் தரம்) கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) மூலம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டரைப் பதிவு செய்வதற்கு கடைசி நாளாக ஆகஸ்ட் 18, 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மதியம் 12 மணிக்கு டெண்டர் பிரிக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்து தாயும் குழந்தையும் வீட்டிற்குச் செல்லும்போது, உரிய சரிபார்ப்பிற்குப் பிறகு இந்தத் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக மாநில அளவில் ஒரு பிரத்யேகத் திட்ட மேலாண்மைப் பிரிவு (SMPU) உருவாக்கப்பட்டு இத்திட்டம் கண்காணிக்கப்படும். மேலும், பயனாளிகளைக் கண்டறிய ‘முக அங்கீகாரத் தொழில்நுட்பம்’ (Face Recognition System) பயன்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்துடன்’ இணைந்து, தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

