சாதாரண தோசையை விட முட்டை தோசை ஆரோக்கியமானது. அரிசி மாவு தோசையுடன் முட்டையைச் சேர்க்கும்போது, அது இரத்தத்தில் சர்க்கரையின் உறிஞ்சும் தன்மையைக் குறைக்கிறது.
முட்டையில் கிளைசீமிக் லோடு (Glycemic load) இல்லை என்பதால், இதைச் சாப்பிடும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென அதிகரிக்காது.
முட்டையில் உள்ள கொழுப்புச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசியைத் தடுத்து, தேவையில்லாத நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க உதவுகிறது.
சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தாராளமாக ஒரு நாளைக்கு 2 முதல் 3 முட்டைகளை முழுதாகச் சாப்பிடலாம் என்றும், இதனால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது என்பது சமீபத்திய மருத்துவ வழிகாட்டுதல் கூறியுள்ளது.
உண்மையா? புரளியா?.. அந்தப் பிரச்சினைக்கு சிக்கன் கால் சூப்..!
சர்க்கரை நோய் ஒரு நோயல்ல, அது உணவு முறையாலேயே கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நிலை. வெறும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை மட்டும் எடுக்காமல், அத்துடன் புரதம், கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது இரத்த சர்க்கரையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உதாரணமாக, பிரட் சாப்பிடும்போது வெறும் பிரட்டாகச் சாப்பிடாமல், முட்டை சேர்த்து ‘பிரட் ஆம்லெட்டாக’ சாப்பிடலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

