சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சென்னையில் ‘ஸ்டார்ட் ரன்.. ஸ்டாப் ட்ரக்ஸ்’ (Start Run.. Stop Drugs) என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், “ஸ்போர்ட்ஸ எடு.. ட்ரக்ஸ விடு” என போர்டில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வெறும் கொடியசைப்பதோடு நிற்காமல், மக்களுடன் இணைந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை முதல்வர் ஓடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. வழியில் சோர்வடைந்த ஒரு பெண்ணுக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து அவர் உற்சாகப்படுத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு குவாட்டர் கேட்டதால் ஆத்திரம்.. புதுமண பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!
“இந்தியாவிலேயே 3 கி.மீ மாரத்தான் ஓடிய ஒரே யூத் முதலமைச்சர் விஜய்தான். காலை 5 மணிக்கே எழுந்து வந்து ஓடியுள்ளார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த எனர்ஜியான செயல், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
Thalaivaaaa @TVKVijayHQ 🔥🔥🔥 pic.twitter.com/bx14gKejYT
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) June 26, 2026

