அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனை நேரில் சந்தித்த சி. விஜயபாஸ்கர், தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!
அண்மைக்காலமாக அதிமுகவிலிருந்து விலகும் 5-வது சட்டமன்ற உறுப்பினர் (MLA) இவராவார். இவருக்கு முன்பாக மாரகதம் குமாரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்யாபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்திருந்தனர்.
ராஜினாமாவுக்கு முன்பாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட அவர், எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகச் சாடி, “தலைமை என்பது அதிகாரமோ அல்லது ஆணவமோ அல்ல… அது அர்ப்பணிப்புடன் அனைவரையும் அரவணைத்துச் செல்வது. உழைக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா?” எனத் கேள்வி எழுப்பியுள்ளார்.

