சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி மைனா என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அமலா பால். அந்த படத்திற்கு, பிறகு முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்தார்.
அதாவது, தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்தபோது அதன் இயக்குனர் விஜயை காதலித்தார். இரண்டு பேரின் வீட்டு சம்பந்தத்துடன் திருமணம் நடந்தது. பல தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
விஜயுடன் பிரிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாகவே இருந்த அமலா பால் அதே சமயத்தில் கோவாவில் வைத்து ஜகத் தேசாய் என்பவரை சந்தித்து அந்த முதல் சந்திப்பில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாகவும், இதையடுத்து திருமணம் செய்து கொண்டார்கள்.
தேம்பித் தேம்பி அழுத வடிவேலு.. கன்னத்தை கிள்ளி கொஞ்சிய அமைச்சர் வன்னி அரசு..! (வீடியோ)
அவர்களுக்கு தற்போது இலாய் என்ற மகனும் இருக்கிறார். திரையுலகின் முன்னணி நடிகை அமலா பால், தனது அன்பு மகன் இலாய்-யின் 2-வது பிறந்தநாளை குடும்பத்தோடு பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய கியூட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தான் இப்போ இன்ஸ்டாகிராமில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.
நடிகை அமலா பால் மற்றும் அவரது கணவர் ஜகத் தேசாய் ஆகியோர் தங்களது மகனுடன் கோவிலுக்குச் சென்று பாரம்பரிய உடையில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள கோவில் யானைக்கு அன்போடு உணவளித்து, தங்களது செல்ல மகனுக்கு யானையிடம் ஆசியும் வாங்கியுள்ளனர்.
இந்த அழகிய தருணம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அமலா பால், “கண் இமைக்கும் நேரத்தில் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. மற்றொருவரை எப்படி நிபந்தனையின்றி நேசிக்க வேண்டும் என்பதை இந்த தாய்மை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. இது எனக்குக் கிடைத்த பேரானந்தம்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

