தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி கண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவி விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
அதற்காக, அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் 234 தொகுதிகளிலும், ஒரு தொகுதி காலியாகிவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டைப் பையில் ‘அம்மா’வின் படம்.. சட்டசபையில் கவனம் ஈர்த்த செங்கோட்டையன்..!
முன்னதாக, எதிர்க்கட்சி என்ற முறையில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார். பொதுவாக, முதலமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பரஸ்பரம் தன்னுடைய மரியாதை தெரிவித்துக்கொண்டு பதவி ஏற்பது தான் இதனால் வரை சட்டப்பேரவையில் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சருக்கு பரஸ்பரம் மரியாதை கூட செலுத்தாமல் குறிப்பிடத்தக்கது.

