ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மரணம் அடைந்துள்ளார். தனது பூர்வீக ஊரான ஜோத்பூருக்கு சென்ற வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாக நாட்டாமை, சூரிய வம்சம் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்திருந்தார்.
ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் அப்பாவான ஆர் பி சவுத்ரி விபத்தில் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஜ்பீன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ஆர்.பி சவுத்ரிக்கு ஜித்தன் ரமேஷ், ஜீவா மட்டுமின்றி சுரேஷ் மற்றும் ஜீவன் என மேலும், இரு மகன்களும் உள்ளனர்.
‘அந்த’ ரகசியம் திரிஷாவுக்குத்தான் தெரியும்.. இணையத்தில் ட்ரெண்டாகும் தோழிகளின் நட்பு..!
தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தையும் மற்ற தொழிகளையும் அவர்கள் பார்த்து வருகின்றனர். ஆர்.பி. சவுத்ரியின் உடலை இன்று சென்னைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

