கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா. வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், சிறுத்தை, வீரம், பாகுபலி என பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து டாப் நடிகையாக இருந்தார். ஒரு கட்டத்தில், தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், படு கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகளில் வரம்பு மீறி நடித்திருந்தார்.

முன்னதாக, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு அவர் ஆடிய டான்ஸ் தமன்னாவை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் மசாலா சாங் காக தமன்னா ஆடி வந்தார். வில்லியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக மாறியவர் தமன்னா. இவரை ரசிகர்கள் மில்க் பியூட்டி எனவும் கொண்டாடுகின்றனர். கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமன்னா காதல் மற்றும் உறவு குறித்து வெளிப்படையாக பகிர்ந்த கருத்துக்கள் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றைய காலத்தில் காதல் மற்றும் உறவு என்றால் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. காதலில் எதிர்ப்புகள் அதிகரிக்கும் போது அது ஒரு வகையில் வியாபாரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உண்மையான காதல் என்பது ஒருவரை கட்டுப்படுத்துவது அல்ல. அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவதில் தான் இருக்கிறது. நம் எண்ணங்கள் மற்றவரின் மீது திணிப்பதன் மூலம் காதலை நிரூபிக்க முடியாது. காதல் என்பது வாழ்க்கையில் ஒரே முறை மட்டுமே வருவது அல்ல. அது பலமுறை ஏற்படக்கூடிய ஒரு உணர்ச்சி என்றும், தெரிவித்தார்.

அந்த உணர்ச்சி வெளிப்புற காரணங்களால் அல்ல. நம்மில் இருந்து உருவாகும் என்றும், தமன்னா அழகாக விளக்கியுள்ளார். தமன்னாவின் இந்த கருத்துக்கள் இன்றைய தலைமுறையினருக்கு காதலை புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கும் வகையில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நல்லவளா?.. தனது குழந்தைகள் பற்றி மனம் திறந்த வனிதா விஜயகுமார்..!

நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவுடன் ‘தி லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற படத்தில் நடித்த போது இருவரும் காதலர்களாக பல இடங்களில் சுற்றித்திரிந்த நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

