முகத்தில் தேவையற்ற முடிகள் இருப்பது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஒரு மோசமான சரும பிரச்சனையாகும். சில பெண்கள் முகத்தில் இருக்கும் முடியை சேவ் செய்து கொள்வார்கள். சிலர் த்ரெட்டிங் செய்கிறார்கள். ஆனால், கன்னங்கள் மற்றும் தாடையை சுற்றியுள்ள மிக சிறிய முடியை சமாளிப்பது என்பது மிகவும் எரிச்சல் ஊட்டும். நிச்சயமாகவே பலருக்கு இருந்து வருகிறது. தற்போது, பெரும்பாலானோர் அழகு நிலையங்களுக்கு சென்று சிகிச்சைகள் பெற்று வருகிறார்கள்.

தேவையற்ற முடிகளை அகற்றும் அதே வேளையில் சில இயற்கை வீட்டு வைத்தியங்களை வைத்து முடி வளர்ச்சியை குறைத்து மெதுவாக்கலாம். வீட்டிலே, நீங்கள் உருவாக்கக்கூடிய சில இயற்கை மாஸ்குகள் இருக்கின்றன. இது பக்க விளைவுகள் அற்றவை. பலன் அளிக்கக் கூடியவை. இந்த பதிவில், உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கான வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
முடி சரசரவென வளர வேண்டுமா?.. தேங்காய்ப் பால் ஹேர் மாஸ்க்கின் ரகசியம் இதோ..!
மஞ்சள்

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அழகு குறிப்புகளில் மஞ்சள் பயன்படுத்தப்படும் ஒரு மந்திரப் பொருளாகும். முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்க 2 டீஸ்பூன் மஞ்சத்தூளை எடுத்து சிறிது பால் மற்றும் ரோஸ் வாட்டர் இல் சேர்த்து கலக்கவும். இதை நன்கு கெட்டியான பேஸ்டாக கலக்கவும், இப்போது தேவையற்ற முடி உள்ள பகுதிகளில் சமமாக தடவி உலர விடவும். நன்றாக உலர்ந்ததும் அந்த இடத்தை தேய்த்து தண்ணீரில் கழுவும். இது வாரத்திற்கு மூன்று முறை செய்தால் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
முட்டையின் வெள்ளை கரு

முட்டையின் வெள்ளை கரு சிறிது சர்க்கரை மற்றும் சோள மாவு அல்லது அரிசி மாவு இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இதை உங்கள் முகத்தில் சமமாக தடவி மற்றும் கண்களை தவிர்த்து தேய்த்து நன்றாக உலர விடவும். அது உங்கள் முகத்தில் நன்றாக காய்ந்து ஒட்டிக்கொண்டவுடன் மேல்நோக்கி மெதுவாக உறிக்கவும். இது முகத்தில் இருக்கக்கூடிய மெல்லிய முடிகள் வெளியேற உதவுகிறது. சருமத்தையும் மிருதுவாகுகிறது.
எலுமிச்சை

எலுமிச்சை முடி வேர்களை பலவீனப்படுத்தி முடியை பலவீனம் ஆகுகிறது. இந்த மாஸ்க் செய்ய இரண்டு டீஸ்பூன் சர்க்கரை ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் அனைத்து பொருட்களையும் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் மூன்று முறை இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம்.
தேன்

எலுமிச்சை ஒரு இயற்கையான பிளீச்சிங் பொருளாக செயல்படுகிறது மற்றும் காலப்போக்கில் முகம் முடியை மென்மையாக்குகிறது. இந்த கலவை உங்கள் சருமத்தை எப்போதும் மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த மாஸ்க் தயாரிக்க ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் புதிய எலுமிச்சை சாறு மட்டும் போதும் இரண்டையும் கலந்து முகத்தில் உள்ள முடிகள் இருக்கக்கூடிய பகுதிகளில் மென்மையாக தேய்க்கவும். இருபது நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் ஒரு சுத்தமான துணியை மெதுவான நீரில் நினைத்து மாஸ்கை மெதுவாக துடைக்கவும். இது முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்கும் சருமத்தை பிரகாசிக்கவும் உதவி புரியும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

