தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கடைசி கட்ட பிரச்சாரத்தில் பேசிய வீடியோக்கள் தற்போது, இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், குழந்தைகளிடம் ஓட்டு கேட்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய் தனது பிரச்சார உரையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளிடம் வாக்கு கேட்பது போல பேசினார். அதாவது, குழந்தைகளான நீங்கள் எப்படி உங்களுக்கு சாக்லேட் வேண்டும் என்றால், அடப்பிடித்து சாக்லேட் வாங்குவீர்கள். அப்படி, அப்பா அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்டு அனைவரிடமும் அடம்பிடியுங்கள் என்று கூறியிருந்தார்.
எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

விஜயின் இந்த பேச்சுக்கு ரங்கராஜ் பாண்டே அளித்துள்ள பதிலடி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் குழந்தைகளிடம் ஒட்டு கேட்கிறார் என்றால், அவர்களுக்குத்தான் விவரம் தெரியாது. விஜய் மாமா வேண்டும் என்று அடம் பிடிப்பது போல் அடம்பிடிப்பார்கள் என்று தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அவரின் இந்த விமர்சனம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Pandey: விஜய் @TVKVijayHQ குழந்தைகள்கிட்ட ஓட்டு கேட்க ஆரம்பிச்சுட்டாரு, ஏன்னா அவங்களுக்குத்தான் விவரம் தெரியாது 😂😂😂#NoVoteForTVK pic.twitter.com/Cl5KelcR7f
— ஈரோடு சிவகிரி (@yetuyegambaram) April 22, 2026

