கோவையின் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுகவினர் நடத்திய அராஜகம் மற்றும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்குத் திமுகவினர் 5,000 பணம் பட்டுவாடா செய்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர்.
ஏன் மசோதா நிறைவேறவில்லை?.. பிரதமர் மோடிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் காட்டம்..!
கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் களம் உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ளது. புலியகுளம் மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுக மற்றும் பாஜகவினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பணத்துடன் இருந்த நபர்களை அதிமுகவினர் கையும் களவுமாகப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பணம் மற்றும் டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.இராமநாதபுரம் காவல் நிலையத்தில் பிடிபட்ட நபர்களை ஒப்படைத்தபோது, திமுகவினர் அவர்களை விடுவிக்கக் கோரி முற்றுகையிட்டனர்.
இதனால் போலீசாருக்கும் அரசியல் கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூழ்நிலையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் ரமேஷ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சியின் அராஜகத்திற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் துணை போவதாக அவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவையில் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த நள்ளிரவு மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”
முன்னதாக, கோவையில் தெற்கு தொகுதியில் திமுகவின் வேட்பாளராக, செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

