விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன மருமகள் சீரியலில் நடித்தவர் நடிகை ஸ்வேதா இவரது கணவர் என கூறிக்கொண்டு ஆதி என்ற ஒரு நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்து இருந்தார். அது பற்றி தற்போது ஸ்வேதா கண்ணீருடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அவ்வளவு கோபம் அவ்வளவு வலிக்குது. பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறது. நான் ஆதி என்ற ஒருவனை லவ் பண்ணேன். ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி எல்லாரையும் கூப்பிட்டு வச்சு எல்லாம் திருமணம் செய்யல, வீட்டை விட்டு வந்து விட்டேன்.

அவனுக்காக என் பெற்றோர், குடும்பம், தம்பி, நண்பர்கள் என எல்லாரையும் விட்டுவிட்டு அவன் ஒரு ஆளை மட்டுமே நம்பி வந்தேன். அதற்கு முன்பே நான் பிசினஸ் பண்ண போறேன் என சொன்னான் நஷ்டம் ஆகிவிட்டது என அடிக்கடி சோகமாக வருவான். அவன் பேசுனது எல்லாம் நம்பி நான் பைத்தியக்காரி மாதிரி போட்டு இருந்த நகைகளை எல்லாம் அவனுக்கு கொடுத்து விட்டேன். இதெல்லாம் காலேஜ் படிக்கும் போது நடந்தது.
வீட்டில் பொய் சொல்லி சமாளித்தேன். உண்மை தெரிந்த பிறகு அவனை அழைத்து வீட்டில் எச்சரித்து அடித்தார்கள். நானும் அவனுக்காக அடி வாங்கினேன். அதை எல்லாம் விற்று விட்டேன் என சொன்னான் நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் தான் படித்துக் கொண்டிருந்தேன்.

இப்பவே, நகையை வாங்கி ஏமாற்றுகிறான் அவன் வேண்டாம் என எவ்வளவோ என் குடும்பத்தார் சொன்னார்கள். நான் கேட்கவில்லை நம்மை பிரித்து விடுவார்கள். ஒரு ஒரு சைன் போட்டால் போதும் என்று சொன்னான். அதைக் கேட்டு நான் வாழ்க்கையில் பெரிய தப்பு செய்துவிட்டேன். அது பற்றி தற்போது, ஒவ்வொரு நொடியும் வருத்தப்படுகிறேன்.
அவன் வீட்டிலும் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை. சாப்பிடாமல் தூங்காமல் உடையை கூட மாற்றாமல் பல நாள் சுத்திக் கொண்டிருந்தோம். அதன்பின் அவன் வீட்டில் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அவன் வேலைக்கு போகவில்லை. அங்கு அவர்கள் வீட்டில் சும்மா சாப்பிட எனக்கு பிடிக்கவில்லை. சென்னைக்கு போய்விடலாம் என கூறி அவனையும் அழைத்து வந்து விட்டேன். பத்தாம் வகுப்பில் இருந்து மாடலிங் வெப் சீரிஸ் என நடித்துக் கொண்டிருந்தேன்.

சென்னை வந்த பிறகுதான் சீரியல் வாய்ப்பு வந்தது. சின்ன மருமகள் சீரியலில் கஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒருத்தி வேலைக்கு சென்று தான் வீட்டை பார்த்துக் கொண்டேன். நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் உனக்கு தான் கொடுத்தேன். உன் மீது கேஸ் இருக்கிறது என சொன்னதால் அதற்காக நான் கடன் வாங்கி செலவு செய்தேன்.
ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!
உன்னை லவ் பண்ணதால் தான் தற்போது கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன். உன்னைப் பற்றி உண்மை தெரிந்த பிறகும் இன்னும் எத்தனை பேரை ஏமாத்திட்டு இருக்க நீ என்ன தைரியத்துல சுத்துற, ஒருநாள் மாட்டுவன்னு தெரியாதா? என்னை சமாதானப்படுத்த கூட நீ பேசவில்லை. நீ எல்லாம் மனுசனே கிடையாது. இன்டர்வியூ கொடுத்துட்டு இருக்க, எனக்கு உன்னை பிடிக்கலை. இப்படி ஒரு கேவலமான ஜென்மம் எனக்கு தேவையில்லை. என்ன பண்ண முடியுமோ பண்ணு நான் பார்த்துக்கிறேன்.
என்னால் நிம்மதியா இருக்க முடியல, ஏதாவது பண்ணிக்கப் போறேன்னு, எதுக்கு அப்படி சைக்கோ போல எல்லாம் செய்கிறாய். நான் மென்டலி பாதிக்கப்படுகிறேன். நீ எல்லாம் மனுசனே கிடையாது. எனக்கு ஏதாவது, ஆனால் அதற்கு அவன் மட்டும் தான் காரணமாய் இருப்பான் என எல்லோருக்கும் சொல்கிறேன். இவ்வாறு கோபமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

