தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவரை மில்க் பியூட்டி என்று அழைப்பார்கள். பிரபல சேனல் ஒன்றில் நேர்காணலில் கலந்து கொண்ட தமன்னா தனது சரும பராமரிப்பு குறிப்பு கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர் அதில் பதில் அளித்துள்ளார்.

அதாவது, முகப்பருக்கள் வந்தால் தன்னுடைய வாய் உமிழ்நீரை கொண்டு சரி செய்வதாக அதில் கூறியுள்ளார். இவருடைய பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பேசுயையில், ஒருநாள் என்னுடைய நாயை வெளியில் கூட்டி செல்லும் போது ஒருவர் என்னை சந்தித்தார்.

எண்ணெய் சருமமா?.. எண்ணெய் பசை முகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரகசியம் இதோ..!
என்னுடைய முகத்தில் முகப்பருக்கள் இருந்தன. உங்களுக்கும் முகப்பரு வருமா என்று கேட்டார். நாங்களும் மற்ற பெண்களைப் போல தானே நிறையவே வரும் என்று நானும் கூறினேன். நான் முகப்பருக்களுக்கு என்னுடைய எச்சிலை பருட்களின் மீது தடவி சரி செய்து விடுகிறேன். காலையில், வெறும் வாயில் உள்ள எச்சிலை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில், அறிவியல் ரீதியாக காலையில் நம் வாயில் உள்ள எச்சிலில் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது அது முகப்பருக்களுக்கு எதிராக நிச்சியமாக வேலை செய்யும் இது எனக்கு நன்றாக வேலை செய்கிறது என்று அந்த பேட்டியில் தமன்னா வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
நீண்ட கூந்தல் வேண்டுமா?.. முடி கொட்டுவதை தடுத்து கூந்தலை வளர்க்கும் வெந்தயம்..!

மேலும், தன்னுடைய அழகுக்கு காரணமான டயட் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். சருமத்தை பாதிக்கும் எந்த உணவையும் நான் உட்கொள்வதில்லை. பலரும் தங்களுக்கு இருக்கும் உணவு ஓவ்வாமைகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஏன் பல ஆண்டுகளாக எனக்கு கோதுமை, பார்லி போன்ற உணவுகளில் உள்ள பால் பொருட்களால் ஒவ்வாமை என்பதை தெரியாமல் இருந்து.

அதை தவிர்த்த பிறகு, என் சரும அழகில் முன்னேற்றம் கண்டேன். சரும அழகு பெறுவதற்கு நீங்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் உங்கள் உடலை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் உடலின் பிரதிபலிப்புதான் உங்களுடைய சருமம் உங்கள் உடல் சுத்தமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் முகமும் சருமும் நிச்சயமாக அழகாகவும் பிரகாசமாகவும் இருக்கும் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

