கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் தலைமை பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கிளை அலுவலகங்களில் விஷவாயு வெடிகுண்டு வெடிக்கும் என மாவட்ட பாஸ்போட் அலுவலக மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்தது.
இதனால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் கட்டிடத்தில் அமைந்துள்ள பாஸ்போட் கிளை அலுவலகத்தில் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையிட உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது பாஸ்போர்ட் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.

