118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்தார் விஜய். சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவால் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவது உறுதியானது.
தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக் கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார். மே 7-ம் தேதி புதிய அரசு பதவியேற்கிறது.