Author: Prime Reporter
திருச்சி அருகே திமுக கவுன்சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி காட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியின் 11-ஆம் வார்டு உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான ரஞ்சித் குமார் நேற்றிரவு திருவெறும்பூர்- நாவல்பட்டு சாலையில் இரு சக்கர ஊர்தியில் சென்று கொண்டிருந்த போது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது. ஆளும் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லாத அளவுக்கு சட்டம் – ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. ஆட்சியில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலையை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனை. சில வாரங்களுக்கு முன் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட…
நெல்லையில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது தொகுதியை மாற்றியுள்ளார். இது குறித்து, தமிழக பாஜக தலைவர் Nainar Nagendran விளக்கம் அளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக தேர்தல் பொறுப்பாளராக உள்ள மத்திய அமைச்சர் Piyush Goyal சென்னை வருகை தந்தவுடன், இன்று மாலை பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்,” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசும்போது, “நான் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், திருநெல்வேலியின் மகன் தான். என் வாழ்நாள் முழுவதும் அந்த மக்களை மறக்க முடியாது. பலமுறை நெல்லை தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் எனக்கு உள்ளது. இந்த முறை கூட்டணி கணக்கில், அந்த தொகுதியை AIADMK-க்கு ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டோம். அதனால் அவர்கள் அங்கு போட்டியிடுகின்றனர். அதேபோல், அவர்கள் முன்பு போட்டியிட்ட சாத்தூர் தொகுதியில் நான் களமிறங்குகிறேன்,” என கூறினார். எனக்கும் ஆசையா இருக்கு.. தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த மன்சூர் அலிகனால் பரபரப்பு!…
ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி; 15 பந்துகளில் அரைசதம் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஸ்பெயின் வான்பரப்பை மூட உத்தரவு; “யாருடைய உதவியும் தேவையில்லை” என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆவேசமான பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவின் சிப் கனவு நனவானது! குஜராத் சனந்தில் ₹3,300 கோடி மதிப்பிலான கெய்ன்ஸ் செமிகான் செமிகண்டக்டர் ஆலையைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
தண்டாவளத்தில் தலையை வைத்து நடிகர் மன்சூர் அலிகான் படுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலி கான் தனது இந்திய ஜனதா கட்சி சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், லால்குடி தொகுதிக்குட்பட்ட கல்லக்குடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அவர் செய்த செயல் கவனத்தை ஈர்த்தது. கல்லக்குடி ரெயில் நிலைய தண்டவாளத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஒருகாலத்தில் போராட்டத்தின் ஒரு பகுதியாக படுத்திருந்த இடத்தில், மன்சூர் அலிகான் சில நிமிடங்கள் படுத்திருந்தார். துக்கம் தாளாமல் சென்னை அணி ஜெர்சிக்கு முத்தமிட்ட RR வீரர் ஜடேஜா.. வைரலாகும் வீடியோ! இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்லக்குடி ரெயில் நிலையம் ஒரு வரலாற்றுச் சின்னம். முத்தமிழறிஞர் கலைஞர் படுத்திருந்த அந்த…
சென்னை ஐஐடி-யில் 2026-27 கல்வியாண்டிற்கான முதுகலை (M.Tech) படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது; ஏஐ, டேட்டா சயின்ஸ் மற்றும் இவி படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.
சோசியல் மீடியா உலகிற்கு உங்களை வரவேற்கிறேன் அண்ணா” – சமூக வலைதளங்களில் இணைந்த சுந்தர் சி-யின் புதிய அவதாரத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஆர்த்தி ரவி பதிவிட்ட வைரல் பதிவு
ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. Chennai Super Kings மற்றும் Rajasthan Royals அணிகள் மோதிய இந்தப் போட்டியில், சென்னை அணி எதிர்பாராத விதமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டியின் போது நடந்த ஒரு சிறிய சம்பவம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. மைதானத்தில் இருந்த Ravindra Jadeja திடீரென Khaleel Ahmed அணிந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் பதிக்கப்பட்டிருந்த லோகோவை முத்தமிட்டார். இந்த எதிர்பாராத செயல் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, பல்வேறு கருத்துக்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, கடந்த சீசன் வரை சென்னை அணியின் முக்கிய ஆட்டக்காரராக விளங்கிய ஜடேஜா, இந்த ஆண்டு நடந்த மெகா ஏல மாற்றங்களால் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார். அதுவே இருந்தபோதிலும், சென்னை அணியுடன் உள்ள அவரது உணர்ச்சி பிணைப்பு இன்னும் குறையவில்லை என்பதை இந்தச் செயல் வெளிப்படுத்துகிறது என ரசிகர்கள் கருத்து…
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக பங்குனி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. விழாவில் ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். இவ்வாண்டிற்கான விழாவையொட்டி (திங்கட்கிழமை)நேற்று இரவு 1மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன.50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது. கறிவிருந்தில் புன்னாபட்டி, ட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர். (கடந்த திங்கட்கிழமை அன்றும் இக்கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கறி விருந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது)
